Home இலங்கை அரசியல் ஜனாதிபதி வேட்பாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

ஜனாதிபதி வேட்பாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

0

ஜனாதிபதி வேட்பாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனசெத பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் அவரது பாதுகாவலர்களை கடுஞ் சொற்களினால் திட்டி தாக்க முற்பட்டதாக ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நேற்றையதினம் (15.09.2024) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முறைப்பாடு 

இந்த சம்பவம் தொடர்பில் இன்றையதினம் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  

இதனைத் தொடர்ந்து, அனுராதபுரம் பண்டுலாகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version