Home முக்கியச் செய்திகள் அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கை: சந்தேகநபர்கள் குறித்து வெளியான தகவல்

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கை: சந்தேகநபர்கள் குறித்து வெளியான தகவல்

0

இந்நாட்டில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு காவல்துறையினர் தடுப்பு உத்தரவுகளை பெற்றுள்ளனர்.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எச்சரிக்கை 

இதற்கிடையில், இந்த நாட்டில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இஸ்ரேலிய பிரஜைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என அறுகம்பேவில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பாதுகாப்பு 

இதனை தொடர்ந்து, பல்வேறு சர்வதேச நாடுகளும் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கைகளை விடுத்த நிலையில், குழப்பமான சூழ்நிலைகள் உருவாகின.

எவ்வாறாயினும், அறுகம்பே சுற்றுலாப் பிரதேசத்தில் சுமார் 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குவிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version