Home இலங்கை அரசியல் நாமலுக்கு ஏற்பட்ட பின்னடைவு : ரணில் பக்கம் சாய்ந்த அமைச்சர்

நாமலுக்கு ஏற்பட்ட பின்னடைவு : ரணில் பக்கம் சாய்ந்த அமைச்சர்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்க உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த(Ashoka Priyantha) அறிவித்துள்ளார்.

முன்னதாக நாமல் ராஜபக்சவுக்கு(namal rajapaksa) ஆதரவளிக்க அசோக பிரியந்த தீர்மானித்திருந்த நிலையிலேயே தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார்.

இன்று காலை முடிவை அறிவித்த அமைச்சர்

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (20) காலை கொழும்பு அரலியகஹா மன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் தனது முடிவை அறிவித்துள்ளார்.

இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து, அவருடன் இணைந்து கொண்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/ashoka-priyanthas-support-to-president-ranil-1724147730

NO COMMENTS

Exit mobile version