அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கொலொன்ன பிரதேச செயலக அதிகாரி ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்வேசும பண மோசடி
அஸ்வேசும பணத்தை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில், சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அதிகாரி நேற்று (13) பொலிஸ் நிதி குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரிடம் முப்பத்தைந்து இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் மோசடி செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
