Home இலங்கை அரசியல் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் சொத்து : மறுக்கும் நாமல்

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் சொத்து : மறுக்கும் நாமல்

0

உகாண்டாவில் நிதி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பரப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை என்னால் பொறுப்புடன் கூற முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான எதிர்கால திட்டம் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கித்தியஸ்தர்கள் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த கலந்துரையாடலின் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களின் சொத்து

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏனைய கட்சிகளை போல எங்களது கட்சி பிளவுப்படாது மொட்டு கட்சி புத்துணர்வு பெற்றுள்ளதாக என்னால் கூற முடியும்.

இன்னு புதிய மொட்டு கட்சி உள்ளது, அன்று இருந்த மொட்டு கட்சி இல்லை, சிறந்த அணி உள்ளது அத்தோடு நவீன தலைமுறையுடன் முன்னோக்கி செல்ல முடியும் என்ற நம்பிக்கை என்னிடமுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாமல் ராஜபக்சவைவை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

பொது நிதிகள் கொள்ளை

இந்த கோரிக்கையை ப்ளஸ் வன் என்ற அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி (Vinsatha Yasasmini) விடுத்துள்ளார்.

பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு உகாண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்த கூற்றுக்களின் காணொளி காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நாமல் ராஜபக்ச, அவற்றை நிருபித்து காட்டுமாறு சவால் விடுத்திருந்தார்.

இந்தநிலையில், நாமல் ராஜபக்ச டுவிட்டரில் சவால் விடுத்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வின்சத யஸஸ்மினி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version