Home இலங்கை சமூகம் மத்திய அதிவேக நெடுஞ்சாலை குறித்து ஜனாதிபதியின் நற்செய்தி

மத்திய அதிவேக நெடுஞ்சாலை குறித்து ஜனாதிபதியின் நற்செய்தி

0

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் ஜப்பானின் ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற பேரணியொன்றில் உரையாற்றிய திஸாநாயக்க, ஜப்பானிய தூதுவருடனான கலந்துரையாடல் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கும் விரைவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளை எளிதாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

அத்தோடு, கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் திட்டம்

அதிவேக நெடுஞ்சாலைக்கு கூடுதலாக, உள்ளூர் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக பிராந்திய பேருந்து முனையங்களுடனான பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேசிய அபிவிருத்தியை முன்னோக்கி நகர்த்துவதற்கு திறமையான மற்றும் செயலூக்கமுள்ள அரசாங்கத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/attempt-to-complete-central-expressway-anura-1730639401

NO COMMENTS

Exit mobile version