Home இலங்கை சமூகம் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் : முன்னெடுக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கலந்துரையாடல்

அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் : முன்னெடுக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கலந்துரையாடல்

0

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (25) பிற்பகல் வாகரை அம்மந்தனாவெளி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

விவசாய குழுக்கள் 

இந்த கலந்துரையாடலில் பிரதேசத்திலுள்ள விவசாய குழுக்கள் மற்றும் கடல் தொழிலாளர் சமூகத்தினருடன் தமிழ் மக்கள் பொதுச்சபையினர் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேசத்திற்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் உள்ள கணியவள (இல்மனைட்), இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிரான அமைப்புக்கள் மற்றும் கதிரவெளி கிராம அபிவிருத்தி சங்கம் என்பவற்றுடன் இணைந்து குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/awareness-discussion-nomination-tamil-candidate-1719391702

NO COMMENTS

Exit mobile version