Home முக்கியச் செய்திகள் பாதாள உலக தலைவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

பாதாள உலக தலைவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

0

 புதிய இணைப்பு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இரண்டு சக்திவாய்ந்த குற்றவியல் கும்பல் உறுப்பினர்களான “பக்கோ சமன்” மற்றும் “டெம்பிலி லஹிரு” ஆகியோர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

அதன்படி, அனுர விதானகமகே எனப்படும் கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் கொலை தொடர்பாக பக்கோ சமன் மற்றும் டெம்பிலி லஹிருவை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

முதலாம் இணைப்பு

 இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இரண்டு சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பல் தலைவர்களான “பக்கோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு சமீபத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்தோனேசியாவில் கைது 

கணேமுல்ல சஞ்சீவ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான கொலைகளில் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பேர் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை காவல்துறை மற்றும் ஜகார்த்தா காவல்துறையின் சிறப்புக் குழு இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

NO COMMENTS

Exit mobile version