Home இலங்கை அரசியல் பொது தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்

பொது தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிபதி கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், தற்போதைக்கு வேட்பாளர் விண்ணப்பப் படிவம், வேட்பு மனுக்கள் உள்ளிட்ட படிவங்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அச்சிடும் பணிகளுக்கான செலவுத் தொகை இதுவரை உத்தேச மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.  

அச்சிடும் பணிகள்

எனினும், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதிக்கு ஒருவார காலத்துக்கு முன்னதாக அச்சிடும் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டு, உத்தியோகபூர்வ வாக்கு அறிவித்தல் பத்திரங்கள் உள்ளிட்ட இன்னும் சில படிவங்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கப்படும் என்றும் கங்கா லியனகே மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version