Home இலங்கை சமூகம் பண்டாரவளை – பூனாகலை வீதி புனரமைப்புக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

பண்டாரவளை – பூனாகலை வீதி புனரமைப்புக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

0

பண்டாரவளை  – பூனாகலை பிரதான வீதியில் இருந்து அம்பிட்டிகந்த வீதி வரை புனரமைப்பு பணிகளை தொடங்கி வைக்கும் முகமாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வானது, நேற்று (08.07.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் குறித்த வீதி புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கை 

அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பூனாகலை – அம்பிட்டிகந்த வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version