உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் நாளை (01) சில மதுபானசாலைகள் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மே தின பேரணிகள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் குறித்த தினத்தில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுபானசாலைகள்
இதேவேளை மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/bar-closing-date-in-may-day-1714473777?itm_source=parsely-popular
