Home இலங்கை அரசியல் திடீரென வெளிநாட்டுக்கு பறந்த பசில்

திடீரென வெளிநாட்டுக்கு பறந்த பசில்

0

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (Sri Lanka Podujana Peramuna) ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று (20.9.2024) வெள்ளிக்கிழமை காலை பயணமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்காவிற்கு பயணம்

இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ச துபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பசில் ராஜபக்ச எந்த நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பொதுவாக அமெரிக்காவிற்கு அடிக்கடி பயணம் செய்வதினை வழக்கமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version