Home முக்கியச் செய்திகள் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான சிறந்த எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கான சிறந்த எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்

0

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. அரிசி – ஒரு கப்
  2. செம்பருத்தி இலைகள்- 10
  3. செம்பருத்தி பூ- 10
  4. விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை எடுத்து நன்றாக கழுவி 5 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பின் செம்பருத்தி இலைகளை எடுத்து சிறிது சிறிதாக வெட்டி, அரிசி ஊற வைத்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
  3. பின்னர் அதில் செம்பருத்தி பூவை சேர்த்து அடுப்பில் வைத்து அதிகமான தீயில் வேக வைக்கவும்.

  4. அரிசி பாதி அளவு வெந்து வந்ததும் இதை ஆறவைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுக்கவும்.
  5. இந்த நீரை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்து குளிக்க செல்வதற்கு முன் இந்த தண்ணீரில் விளக்கெண்ணெய் கலந்து கொள்ளவும்.

  6. பின்னர் அந்த தண்ணீரை உச்சந்தலையில் வேர்க்கால்கள் படும் அளவிற்கு நன்றாக தடவி மசாஜ் செய்யவும்.

  7. 20 நிமிடம் நன்றாக ஊற வைத்த பின்பு, மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
  8. இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

NO COMMENTS

Exit mobile version