Home இலங்கை சமூகம் தொழிற்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் – 19 பேர் காயம் – ஒருவர் பலி

தொழிற்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் – 19 பேர் காயம் – ஒருவர் பலி

0

திவுலபிட்டிய படல்கம – நீர்கொழும்பு வீதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

கார்பன் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்பில் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

கொதிகலன் வெடிப்பு

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக முற்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version