யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் – வடலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தமுத்து
புஸ்பராசா (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உருக்குலைந்த நிலையில் இருந்த சடலம்
முதியவர் நான்கு நாட்களுக்கு முன்னரே உயிரிழந்துள்ளார். இதனை யாரும்
அவதானிக்காத நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இந்நிலையில் மானிப்பாய்
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற
பொலிஸார் முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதை
அவதானித்தனர்.
சடலத்தை மீட்ட மானிப்பாய் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம்
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
