Home இலங்கை சமூகம் சிலாபம் கடற்கரையில் வயோதிபரின் சடலம் மீட்பு

சிலாபம் கடற்கரையில் வயோதிபரின் சடலம் மீட்பு

0

புத்தளம் – சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் வயோதிபர்
ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று மாலை மீட்கப்பட்டதுடன் இது தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 அடி 4 அங்குலம் உயரமுடைய வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும்
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

வயோதிபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version