புத்தளம் – சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் வயோதிபர்
ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்று மாலை மீட்கப்பட்டதுடன் இது தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 அடி 4 அங்குலம் உயரமுடைய வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும்
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
வயோதிபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
