வவுனியா – கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது.
கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து
இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
[HKQMILV]
உடற்கூற்று பரிசோதனை
இதையடுத்து சம்பவ
இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண
விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டவராவார்.
இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக அவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
