Home இலங்கை சமூகம் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

0

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

அதன்படி, விசேட அதிரடிப்படை, விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸார் உள்ளிட்ட குழு அவ்விடத்துக்கு விரைந்துள்ளனர்.

எனினும் குறித்த மடிக்கணினியில் அவ்வாறான வெடிகுண்டுகள் ஏதும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று பரிசோதனைகளின் பின்னர் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version