Home இலங்கை அரசியல் சுமோவின் செம்புக்கு வைத்தியர் அர்ச்சுனா அடித்த ஆப்பு!

சுமோவின் செம்புக்கு வைத்தியர் அர்ச்சுனா அடித்த ஆப்பு!

0

ஒருவன் மக்களை நேசித்தால், மக்களுக்காக நின்று போராடினால் அந்த மனிதனை மக்கள் எப்படித் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடுவார்கள் என்பதற்கு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வெறும் 25 நாட்கள் மாத்திரமே கடமையாற்றிவிட்டுச் சென்ற வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு சிறந்த உதாரணம்.

இதுதான் யாழ்ப்பாணம்!

இதுதான் தமிழ் மக்கள்!!

ஆனால் இங்கு விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் யாரையாவது பாராட்டிவிட்டால் அல்லது நேசித்துவிட்டால், உடனடியாகவே தமிழரசுக் கட்சியின் ‘முந்திரிக்கொட்டைக்கு’ மூக்கில் வியர்த்துவிடும்.

யாழ்ப்பாணத்தில சனம் கூடினால் அது தனக்காகத்தான் இருக்கவேண்டும் என்பதுதான் அந்த அரசியல்வாதியின் தாரக மந்திரம்.

 தமிழ் மக்கள் மத்தியில் வைத்தியர் பிரபல்யமாவது அந்த முந்திரிக்கொட்டை அரசியல்வாதிக்குப் பிடிக்கவில்லையாம்.

‘வைத்தியர் அர்ச்சுனாவை தாக்கி எழுதுங்கோ..’ என்று முந்திரிக்கொட்டை தனது அல்லக்கைகளுக்கு கட்டளையிட, அல்லக்கைகள் வழமைபோலவே வைத்தியர் பற்றி இல்லாதது பொல்லாததுகள் பற்றியெல்லாம் மூஞ்சிப் புத்தகத்தில எழுதத் தொடங்கிவிட்டினம்.

ஆனால் வைத்தியர் அர்ச்சுனாவும் லேசுப்பட்ட ஆளில்லை.

வலு கெட்டிக்காரன்.

சிம்பிளா ஒரு விடியோவை விட்டு, தமிழரசுக் கட்சி முந்திரிக்கொட்டையின் அந்த அல்லக்கையை போட்டு வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்.

‘அப்பு’.. ‘அப்பு..’ என்று சொல்லி முந்திரிக்கொட்டைக்கும் சேர்த்து ஆப்படித்துவிட்டார் வைத்தியர்.

வைத்தியர் அர்ச்சுனா விட்ட காணொளியை பாருங்கோவன். விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்..

https://www.youtube.com/embed/0WiLRC0FqBE

NO COMMENTS

Exit mobile version