Home இலங்கை அரசியல் நாட்டில் கையூட்டல் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் கையூட்டல் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு

0

நாட்டின் அரச அதிகரிரகள் கையூட்டல் பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையூட்டல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கூட்டாக இணைந்து கையூட்டல் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கையூட்டல் தொகையை அனைவரும் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

கையூட்டல் பெற்றுக் கொள்ளல் பாரதூரமான குற்றம் எனவும் இவ்வாறு கையூட்டல் கொடுக்கும் நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறானவர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் ஒருவர் உள்ளிட்ட மூவர் 41 லட்சம் கையூட்டல் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பிலான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.      

NO COMMENTS

Exit mobile version