Home இலங்கை சமூகம் யாழில் படுகொலை செய்யப்பட்ட நபர்! சகோதரியின் வாக்குமூலத்தில் சந்தேகம்

யாழில் படுகொலை செய்யப்பட்ட நபர்! சகோதரியின் வாக்குமூலத்தில் சந்தேகம்

0

யாழில் (Jaffna) சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் படுகொலை
செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதலாம் ஆம் குறுக்குத் தெரு,
மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து
வந்துள்ளனர்.

குறி சொல்லும் வேலை

இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று
காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில்,

நான் குறி சொல்லும் வேலை செய்து வருகிறேன்.

இரவு மூவர் வீட்டுக்கு வந்து
தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை அவர்கள்
உள்ளே வந்து என்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து
பார்த்த வேளை தம்பி சடலமாக காணப்பட்டார் என கூறியுள்ளார்.

இருப்பினும் குறித்த பெண் வழங்கிய வாக்குமூலத்தில் திருப்தியடையாத யாழ்ப்பாணம்
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/v0ZUGiobuOk

NO COMMENTS

Exit mobile version