Home இலங்கை அரசியல் கடற்றொழில் அமைச்சு தொடர்பில் பாதீட்டீன் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம்

கடற்றொழில் அமைச்சு தொடர்பில் பாதீட்டீன் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம்

0

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதம் இன்று (04) இடம்பெறுகின்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு (Ministry of Rural Development, Social Security and Community Empowerment) மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு (Ministry of Fisheries, Aquatic and Ocean Resources) ஆகியவற்றின் செலவினத் தலைப்புகள் தொடர்பில் இன்று குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

அதன்படி காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.

காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் 124, 216 மற்றும் 331 ஆகிய தலைப்புகளின் கீழ் நடைபெறவுள்ளது.

அத்துடன் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்  151 மற்றும் 290  ஆகிய தலைப்புக்களின் கீழும் குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

மாலை 6.00 முதல் 6.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான ஆளுங்கட்சியின் பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான குழுநிலை விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

https://www.youtube.com/embed/lLFglZ3ezWU

NO COMMENTS

Exit mobile version