Home முக்கியச் செய்திகள் சுங்கத் தலைமையகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களால் பரபரப்பு

சுங்கத் தலைமையகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களால் பரபரப்பு

0

சுங்கத் தலைமையகத்தில் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டமை பரபரப்பை ஏற்புடுத்தியுள்ளது.

கொழும்பு கோட்டை சுங்கத் தலைமையகத்தின் 3வது மாடியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக கோட்டை காவல்துறை தெரிவித்துள்ளது.

கோட்டை காவல் நிலையத்திற்கு அளித்த தகவல்

அங்கு ஒரு ரி-56 உயிருள்ள தோட்டாவும் 12-போர் உயிருள்ள தோட்டாவும் கண்டெடுக்கப்பட்டன.

சுங்கத் தலைமையகத்தின் பணிப்பாளர் நாயகம் கோட்டை காவல் நிலையத்திற்கு அளித்த தொலைபேசி தகவலின்படி, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் உதவி சுங்க அதிகாரிகளின் ஓய்வு அறையில் உயிருள்ள தோட்டாக்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

பல்வேறு கோணங்களில் விசாரணை

இந்த உயிருள்ள தோட்டாக்களை யார் கொண்டு வந்தார்கள் என்பதைக் கண்டறிய குற்றப் புலனாய்வு நிலையம், கைரேகை அலுவலக அதிகாரிகள் மற்றும் நாய்கள் பிரிவின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version