Home முக்கியச் செய்திகள் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து

0

சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது, இன்று (04) முற்பகல் 11.30 மணியளவில்இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

விபத்துக்குள்ளான பேருந்து பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர்  மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version