Home இலங்கை சமூகம் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா

0

கிழக்கில் புகழ்பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விடயத்தை இன்றையதினம் (29) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட் தெரிவித்துள்ளார்.

இதன் படி, எதிர்வரும் 13 ஆம் திகதி 125 ஆவது வருடம் ஆரம்பமாகி 13.10.2025 வரை ஒரு வருடம் 125 ஆவது jubilee ஆண்டாக பிரகடனப்படுத்தப்படுவதாகவும், ஒரு வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல நிகழ்வுகள், செயற்றிட்டங்கள் இடம் பெறவுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

துண்டு பிரசுர வெளியீடு

அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த நிகழ்வுகள் பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர் வரும் 13.10.2024 அன்று 125 ஆவது ஆண்டின் theme, theme பாடல், பாடசாலை வரலாறு மற்றும், நிகழ்வு விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படும்.”

இந்த நிலையில், உபதலைவர் எஸ்.கோகுலராஜன் ஊடக மாநாடு தொடர்பாக விளக்கமளித்து இணைப்பாளராக செயற்பட்டுள்ளார்.

மேலும் அதன் போது, 45 விழாக்குழுவினர் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.youtube.com/embed/dlwYby6pk4o

NO COMMENTS

Exit mobile version