Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

0

இலங்கை மத்திய வங்கியானது ரூ.145000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி ஏல விற்பனையினூடாக திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளது.

திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையில் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version