Home இலங்கை இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்

0

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 25ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

திறைசேரி உண்டியல்கள்

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

அத்துடன்,

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/central-bank-of-sri-lanka-announcement-1740112112

NO COMMENTS

Exit mobile version