Home சினிமா 4வது திருமண நாள், கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட அழகிய...

4வது திருமண நாள், கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட அழகிய பதிவு… வைரல்

0

சைத்ரா ரெட்டி

கன்னட சினிமாவில் நடிக்க தொடங்கி பின் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி.

அந்த தொடருக்கு பின் 2017ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து அசத்தி வந்தார்.

இப்போது சன் டிவியின் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் கயல் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த தொடர் மூலம் சைத்ரா ரெட்டி மிகவும் பிரபலம் ஆனார் என்றே கூறலாம்.

லேட்டஸ்ட் பதிவு

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தனது கணவருக்காக அழகிய பதிவு ஒன்று போட்டுள்ளார். அதாவது சைத்ரா ரெட்டி-ராகேண் இருவரும் திருமணம் செய்து 4 வருடங்கள் எட்டிவிட்டதாம்.

தனது திருமண நாளுக்கு கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை பதிவிட்டு திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார். 

Source: https://cineulagam.com/article/chaitra-reddy-wedding-anniversary-post-1731562315

NO COMMENTS

Exit mobile version