Home இலங்கை அரசியல் ஜே.வி.பியினர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பிக்க ரணவக்க

ஜே.வி.பியினர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பிக்க ரணவக்க

0

நாட்டில் உள்ள அப்பாவி மக்களின் பிள்ளைகள் இலவசமாக உயர்கல்வி பெறும் அரச பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை செயற்பாடுகளை கொண்டு வந்து பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பயமுறுத்துபவர்கள் ஜே.வி.பினர் என பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நடைபெற்ற கண்டி மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், “இன்று நீங்கள் நிற்கும் இடத்தில் இந்த சஹாஸ் தோட்டத்தை நிர்மாணித்து கண்டிக்கு வெளிச்சத்தை கொண்டு வந்தோம். போகம்பர ஏரியின் வளாகம் கட்டப்பட்டது, தலதா மாளிகை முழு அம்சங்களுடன் கூடிய அரண்மனை வளாகமாக மாற்றப்பட்டது, மின்சார வசதிகள், குழாய்கள் வசதிகள் மற்றும் கால்நடை முற்றங்கள் புதுப்பிக்கப்பட்டன.

உலக வங்கியின் உதவி

கண்டி நகருக்கு அடியில் இருந்த 200 ஆண்டுகள் பழமையான சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டது. நாங்கள் வெளியேறிய பின்னர், 5 வருடங்களாக எஞ்சிய ஒன்றரை கிலோமீற்றரை கோட்டாபயவாலும், ரணில் விக்ரமசிங்கவாலும் முடிக்க முடியவில்லை.

உலக வங்கியின் உதவியுடன் கண்டியை முறையான நகரமாக மாற்றுவதன் மூலம் நாட்டிலேயே மிக உயர்ந்த தரம் வாய்ந்த பல்வகை போக்குவரத்து மையத்தை உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் கண்டி மக்களுக்கு அந்த பல்வகை போக்குவரத்து நிலையம் வழங்கப்படும் என உறுதியளிக்கின்றோம்.

ரணில் விக்ரமசிங்க இதுவரை உருவாக்கிய பொருளாதாரம் வெறும் கண்மூடித்தனமானது. ஒவ்வொரு பொருளுக்கும் வரி விதிக்கப்பட்டு மக்கள் வரிச்சுமையால் நசுக்கப்படும் பொருளாதாரம் இது. ஆனால் ரணில் வரி ஏய்ப்பு செய்பவர்களை தொட்டதில்லை. ரணில் மீண்டும் வருவார் என்றால் இன்னும் 5 வருடங்கள் இதே போல் தான் மக்கள் கஷ்டப்படுவர்.

ரணில் இம்முறை தோற்கப்போவது தெரியும். எனவே சஜித் பிரேமதாசவை தோற்கடித்து பழிவாங்க வேண்டும் என்பதே அவரது ஒரே நம்பிக்கை. இன்று இந்த நாட்டில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய வங்கிகளில் 620 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை உள்ளது. 66,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில ஊழல்வாதிகளுக்கு கடன் கொடுத்து அந்த கடனை வசூலிக்காமல், நம் மக்களின் ரொட்டி மற்றும் பாலில் இருந்து வரியை பெற்று வங்கிகளை காப்பாற்ற போகிறார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை 

பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை எனும் துன்புறுத்தல் கலாசார செயல்முறையை கொண்டு வந்தது யார்? அநுர திஸாநாயக்கவின் அரசியல் , லால்காந்தவின் அரசியல். இன்று மூன்று வருட பட்டப்படிப்பை முடிக்க ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகிறது.

அதனால் பல பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகங்களில் சேர இடமில்லை. ஏனெனில் அவர்களால் குழந்தைகளை அரசு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியவில்லை.

நாட்டில் இந்த தனியார் பல்கலைக்கழக அலையை உருவாக்கியது யார்? அநுர திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு . பல்கலைக்கழகங்கள் எப்போது திறக்கப்படும்? அது எப்போது மூடப்படும்? பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அது எப்போது மூடப்படும்? என அவர்களே முடிவு செய்தனர். குழந்தைகளுக்கு கிடைத்த ஒரே விஷயம் கண்ணீர்ப்புகை. ஏனென்றால், அதனால் பாதிக்கப்பட்ட தலைமுறை நாங்கள். 

இப்போது என்ன சொல்கிறார்கள்? அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களையும் எதிர்த்தனர் என சொல்கிறார்கள். நான் சொல்கிறேன், முடிந்தால் ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் தலைவர்கள், தங்கள் பிள்ளைகள் சென்ற பல்கலைக்கழகங்களை, அரசுப் பல்கலைக் கழகத்தை காட்ட சொல்லுங்கள்.

இவர்களில் சிலரின் பிள்ளைகள் நேரடியாக தனியார் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களால் முடிந்தால், என் குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள், என் குழந்தைகள் அரசாங்கப் பள்ளிக்குச் சென்றனர் என காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஜே.வி.பியினரின் தலைவர்களிடம் நான் சவால் விடுகிறேன், உங்களால் , உங்கள் பிள்ளைகள் சென்ற பல்கலைக்கழகங்களை முடிந்தால் முன் வந்து சொல்லுங்கள்” எனவும் பாட்டலி சம்பிக்க சவால் விடுத்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version