Home இலங்கை அரசியல் பிரிந்தவர்கள் ஒன்று கூடினர் : முடிவிற்கு வந்தது வசைபாடல்

பிரிந்தவர்கள் ஒன்று கூடினர் : முடிவிற்கு வந்தது வசைபாடல்

0

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(champika ranawaka) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு(sajith premadasa) ஆதரவளிக்க இணங்கியுள்ளார்.

அதற்கான உடன்படிக்கை நாளை (14ஆம் திகதி) தலவத்துகொடை கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் கைச்சாத்திடப்படவுள்ளது.

சஜித் பிரேமதாச மீது கடும் விமர்சனம்

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பிக்க ரணவக்க, பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து போட்டியிட்டார். அதுமட்டுமல்லாமல் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்து 43வது டிவிசனை உருவாக்கி பின்னர் ஐக்கிய குடியரசு முன்னணியை உருவாக்கினார்.

ராஜபக்ச இல்லாத கூட்டணிக்கு ஆதரவு

மேலும் கடந்த நாட்களில் ராஜபக்ச இல்லாத கூட்டணியை ஆதரிப்பதாக கூறினார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, சந்தர்ப்பம் கிடைத்தால் தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/champikas-support-to-sajith-1723524392

NO COMMENTS

Exit mobile version