Home இலங்கை அரசியல் தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை : சந்திரிக்கா அறிவிப்பு

தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை : சந்திரிக்கா அறிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில்  கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்தரையாடலானது நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து சந்திரிக்கா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்குமாறு கருத்துத் தெரிவித்த நிலையில்,  அங்கு கருத்து தெரிவித்த சந்திரிகா, தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் மற்றும் அத்தனகல்ல பிரதேசத்தில் செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தாம் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/chandrika-on-the-sri-lankan-presidential-election-1723433926

NO COMMENTS

Exit mobile version