Home இலங்கை சமூகம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுப்பொருட்கள்! 200ற்கும் மேற்பட்டோர் பார்வை

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுப்பொருட்கள்! 200ற்கும் மேற்பட்டோர் பார்வை

0

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப்பொருள்கள் நேற்றைய தினம்(5) பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்பட்டன.

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர்.

 200ற்கும் மேற்பட்டோர் பார்வை

தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டது.

இனிவரும் காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால் அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version