செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அகழ்வில் இன்றையதினம்(08.07.2025) மாத்திரம் 3 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மழை நீர் வழிந்தோடுவதற்காக வெட்டப்பட்ட கால்வாயிலும் கூட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குவியலாக கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இந்த அகழ்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதேவேளை, குவியலாகவும் சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் எத்தனை மனித எச்சங்கள் இருக்கும் என சரியாக கூற முடியாத நிலையில் நிபுணர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
