Home இலங்கை அரசியல் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இழுபறி : தமிழரசுக் கட்சிக்குள் குத்துவெட்டு

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இழுபறி : தமிழரசுக் கட்சிக்குள் குத்துவெட்டு

0

மட்டக்களப்பு (Batticaloa) ஏறாவூர் பற்று செங்கலடி (Chenkaladi) பிரதேச சபை தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசுக் கட்சிக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இன்றைய தினம் (03.06.2025) மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களை கைப்பற்றி உள்ள நிலையில் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 05 ஆசனங்கள் தேவைப்படுகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி

ஏற்கனவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தவிசாளர்களாக முரளி மற்றும் நிலாந்தனை கட்சி தெரிவு செய்துள்ள நிலையில் இருவரில் யாருக்கு ஏனைய கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அவரை தவிசாளராக தெரிவு செய்வதற்கு கட்சியின் உயர்மட்ட குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தது. 

அதற்கமைய கடந்த 31ம் திகதி தனக்கான பெரும்பான்மை ஆதரவை முரளியால் காட்ட முடியாமல் போன நிலையில் நிலாந்தன் தனக்கான பெரும்பான்மை ஆதரவை கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு காட்டியிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்றைய தினம் (02.06.2025) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை கூட்டத்தில் முரளிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன் படி முரளி எதிர்வரும் பத்தாம் திகதிக்கு முன்னர் தனக்கான பெரும்பான்மை ஆதரவை எழுத்து மூலம் கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு காட்ட வேண்டும் என்றும் அவ்வாறு காட்ட தவறினால் ஏற்கனவே தனக்கான பெரும்பான்மை ஆதரவை காட்டியுள்ள நிலாந்தனை கட்சி தவிசாளராக முன் நிறுத்தும் என தீர்மானித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version