Home இலங்கை அரசியல் தாமதமின்றி நாட்டுக்கு அறிவியுங்கள் : அரசை வலியுறுத்தும் மொட்டு

தாமதமின்றி நாட்டுக்கு அறிவியுங்கள் : அரசை வலியுறுத்தும் மொட்டு

0

  பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, வராதா என்பதையும், அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதையும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இது விடயத்தில் தாமதம் நிலவக்கூடாது. அறிவிப்பை வெளியிட்டால்தான் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும்.” என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 

  கொழும்பில் நேற்று(02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவையில் மாற்றம் வருமா..!

பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவையில் மாற்றம் வரவுள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன. இப்படியான தகவல்கள் இலங்கைபோன்ற நாடுகளுக்கு பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.

 ஏனெனில் அரசியல் ஸ்திரதமற்ற தன்மை நிலவும் நாடொன்றுக்கு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களும் புதிய முதலீடுகளை செய்ய முன்வரமாட்டார்கள்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்

 எனவே பிரதமர் பதவியில் மாற்றம் வருமா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

NO COMMENTS

Exit mobile version