Home இலங்கை சமூகம் கோழி இறைச்சி பிரியர்களுக்கு வெளியான எச்சரிக்கை

கோழி இறைச்சி பிரியர்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

தற்போது சந்தையில் இருந்து கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதில் அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக சந்தையில் இறந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனை மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்தார்.

அதிக கவனம் தேவை

இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருப்பின் நுகர்வோர் விவகார அதிகாரசபை 1977 க்கு அறிவிக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/chickens-that-have-died-in-the-flood-1718210796

NO COMMENTS

Exit mobile version