Home முக்கியச் செய்திகள் யாழில் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி

யாழில் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி

0

யாழில் (Jaffna) 14 வயது மாணவி ஒருவர் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான முறைப்பாடு நேற்று (14) முன்வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மருத்துவ பரிசோதனை

14 வயது சிறுமியொருவர் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டதாக நேற்று (14) வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்செயலுடன் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version