Home இலங்கை சமூகம் நீர்த் தொட்டியில் வீழ்ந்து 3 வயது குழந்தை பரிதாப மரணம்

நீர்த் தொட்டியில் வீழ்ந்து 3 வயது குழந்தை பரிதாப மரணம்

0

மூன்று வயதுடைய குழந்தையொன்று வீட்டின் நீர்த் தொட்டியில் வீழ்ந்து நீரில்
மூழ்கி உயிரிழந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மீத்தெனிய கிழக்கு பகுதியைச் சேர்ந்த குழந்தையே நேற்று (07.07.2024) இவ்வாறு
உயிரிழந்துள்ளது என்று மீத்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தாய் தனது 9 வயது குழந்தையையும், உயிரிழந்த மூன்று வயது
குழந்தையையும் குளிப்பாட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே உள்ள நீர்த் தொட்டி
இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அதனையடுத்து, அவரது ஒன்பது வயது குழந்தையை குளிப்பாட்டி வீட்டினுள்ளே அழைத்துச்
சென்ற தாய், மூன்று வயது குழந்தையை நீர்த் தொட்டிக்கு அருகில் விட்டுச்
சென்றுள்ளார்.

மீண்டும் வீட்டிலிருந்து வெளியே வந்த தாய், மூன்று வயது குழந்தையைத் தேடியபோது
குழந்தை நீர்த் தொட்டிக்குள் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

பின்னர் குழந்தை மீட்கப்பட்டு மீத்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு
சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது
என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Source: https://tamilwin.com/article/child-died-after-falling-into-a-water-tank-1720431554

NO COMMENTS

Exit mobile version