Home இலங்கை சமூகம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக ஏழு வயது சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி பரிதாபமாக ஏழு வயது சிறுவன் பலி

0

மாத்தளையில் (Matala) மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

வில்கமுவ (wilgamuwa) காவல் பிரிவிற்குட்பட்ட நமினிகம, பெரகானத்த பிரதேசத்தை சேர்ந்த ஏழு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க மின்சார வேலி அமைத்துள்ளனர்.

தினமும் காலை ஆறு மணி முதல் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு மாலை ஆறு மணிக்கு துண்டிக்கப்படும்.

மேலதிக விசாரணை

சம்பவத்தன்று, மின்சாரத்தை துண்டிக்க மறந்த நிலையில் சிறுவன், அங்குள்ள மரத்தில் விளையாட சென்றுள்ள போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் வில்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வில்கமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version