Home முக்கியச் செய்திகள் சந்திரனில் யாரும் செல்லாத பகுதிக்கு சென்ற சீனா: மாதிரிகளை சேகரிக்கும் ரோபோ

சந்திரனில் யாரும் செல்லாத பகுதிக்கு சென்ற சீனா: மாதிரிகளை சேகரிக்கும் ரோபோ

0

சந்திரனில் யாரும் சென்றிறாத இருண்ட பகுதியான தென் துருவத்திற்கு சீனா (china)வெற்றிகரமாக விண்கலமொன்றை ஏவியுள்ளது.

இதன்போது, சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (China National Space Administration) முதன் முதலாக சந்திரனின் தென் துருவத்திற்கு சாங்’இ-6 (Chang’e 6) என்ற விண்கலத்தை இன்று ஏவியுள்ளது.

குறித்த விண்கலமானது, சீன மாகாணம் ஹைனானில் இருக்கும் வென்வாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-5 ஒய்8 (Long March 5) என்ற ரொக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது.

 

மனிதர்கள் நிலவுக்கு

சாங்’இ-6 என்ற விண்கலமானது ஓர் ரோபோ விண்கலமாகும், இதன் மூலம் சந்திரனின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு மீண்டும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

அத்தோடு, சீனாவானது, 2030 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களையும் நிலவுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

Source: https://ibctamil.com/article/china-sent-spacecraft-to-the-dark-side-of-the-moon-1714759781?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version