Home இலங்கை அரசியல் மகிந்தவை அவசர அவசரமாக சந்தித்த சீனத் தூதுவர்!

மகிந்தவை அவசர அவசரமாக சந்தித்த சீனத் தூதுவர்!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் கொழும்பில் உள்ள விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டும் என்று கூறும் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து) சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, மகிந்த விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளதாக என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

மகிந்தவின் அடுத்த இருப்பிடம்

ஜனாதிபதி உரிமைகளை நீக்கும் சட்டமூலம் நேற்று (10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உடனேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டள்ளார்.

அதன்படி, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த ராஜபக்ச, தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version