Home இலங்கை குற்றம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்! கொழும்பில் சீன பிரஜை ஒருவர் கைது

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்! கொழும்பில் சீன பிரஜை ஒருவர் கைது

0

சட்டவிரோத சிகரட்டுகளைத் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சீனப் பிரஜையொருவர் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய தகவல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கொள்ளுப்பிட்டி ரொடுண்டா கார்டன் பிரதேசத்தில் வைத்து குறித்த சீனப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட, சுமார் 600 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சீனப் பிரஜையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version