சீன(china) கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை(sri lanka), வியட்நாம்(vietnam), இந்தோனேசியா(indonesia) ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கப்பலின் வருகை அமையவுள்ளது.
சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை குறித்த கப்பல் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதி
85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18நொட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 கடற்படை கேடட்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் உள்ளது.
கடற்படை அதிகாரிகளிடையே தொழில்முறை திறன்களை வளர்ப்பது மற்றும் பிற நாடுகளின் கடற்படைகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுவான எதிர்காலத்துடன் கடல் நடவடிக்கைகளை தொடங்குவது இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று கப்பலின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் மூன்று நாசகாரி கப்பல்கள்
இந்த கப்பல் தனது பயணத்தின் போது ஹொங்கொங்கில் தொழில்நுட்ப வசதிகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்காவின் மூன்று நாசகாரி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/chinese-ship-to-follow-us-to-sri-lanka-1724493557
