அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கடற்கரைகளை க்ளீன் சிறிலங்கா (Clean Sri
Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் திட்டம் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்ட
செயலகத்தின் வழிகாட்டுதலில் முதற்கட்டமாக முல்லைத்தீவு கடற்கரை மற்றும்
கொக்கிளாய் முகத்துவார கடற்கரை என்பன இன்றய தினம் (11.12.2025) சுத்தம் செய்யப்பட்டன.
முல்லைத்தீவு கடற்கரை மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையிலும்
நடைபெற்றது.
சுத்தம் செய்யும் பணி
கொக்கிளாய் முகத்துவார கடற்கரை சுத்தம் செய்யும் பணியானது கரைத்துரைப்பற்று
பிரதேச செயலாளர் விஜயகுமார் தலைமையிலும் நடைபெற்றது.
குறித்த சிரமதானப் பணியில்
முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்,
கரைத்துரைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்,
இராணுவம், கடற்படை, காவல்துறையினர் கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் முதலானோரின் பங்குபற்றலில் இது நடைபெற்றது.
Clean Sri Lanka செயலகம் மற்றும் இலங்கை
செஞ்சிலுவைச் சங்கத்தினர் இதற்கான ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
