Home இலங்கை சமூகம் காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல தடவைகள் மழை பெய்யும்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் அனுராதபுரம்,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version