Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் அழிவடையும் தென்னை…! தேங்காய்க்கு பெரும் கேள்வி

தமிழர் பகுதியில் அழிவடையும் தென்னை…! தேங்காய்க்கு பெரும் கேள்வி

0

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, தென்னை, வாழை, கமுகு உள்ளிட்ட பல பயிர்கள் அழிவடைந்து வரும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பாரதிபுரம் பகுதி மற்றும் கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது நாட்டில் தேங்காய்க்கு பெரும் கேள்வி நிலவி வருவதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் 

இந்நிலையில், இவ்வாறான இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளமையால் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டு 8 & 9 வருடம் கடந்த நிலையில் பயன்தரக் கூடிய நிலையில் இருந்த பலரது தென்னைகள் அழிவடைந்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேபோன்று வாழைச் செய்கையிலும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு கமுகு போன்றவையும் அழிவடையும் நிலையில் காணப்படுவதாவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version