Home முக்கியச் செய்திகள் நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு: விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு: விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

தேங்காயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக காலி (Galle) மாவட்டத்தில் தேங்காயின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தற்பொழுது ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

தேங்காயின் விலை

நாட்டில் நிலவி வரும் தேங்காய்க்கான தட்டுப்பாடே இவ்வாறு தேங்காய் விலை அதிகரிக்க ஏதுவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்தையில் தேங்காய்க்கான கிராக்கியும் உயர்வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version