கொழும்பில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது கொழும்பு – 10 சங்கராஜா மாவத்தை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
இருவர் படுகாயம்
வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று பகுதியளவிலும், முச்சக்கரவண்டியொன்று முற்றாகவும் சேந்தமடைந்துள்ளன.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |