Home ஏனையவை வாழ்க்கைமுறை பொத்துவில் மதுபானசாலை அனுமதி இரத்து: நீதிமன்றின் உத்தரவு

பொத்துவில் மதுபானசாலை அனுமதி இரத்து: நீதிமன்றின் உத்தரவு

0

அம்பாறை – பொத்துவில் பிரதேசத்திலுள்ள தனியார் மதுபானசாலை ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தினை உடனடியாக இரத்துச் செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொத்துவில் ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி அக்பர் ஹசன் உள்ளிட்ட மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான தீர்ப்பின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல் 

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான சம்பத் விஜயரத்ன மற்றும் அஹ்ஷன் மரைக்கார் ஆகியோர் முன்னிலையில் நீண்ட நாட்களாக விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்த இந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கடந்த 2020ஆம் ஆண்டு மதுவரித் திணைக்களத்தினால் குறித்த தனியார் மதுபானசாலைக்கு வழங்கப்பட்டிருந்த மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தினை இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஆசாத் ஆதம்லெப்பை ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சட்டத்தரணி சுபுன் திசாநாயக்கவுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் முன்னிலையாகி மனுதாரர் தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தார். 

NO COMMENTS

Exit mobile version