Home இலங்கை சமூகம் கொழும்பு தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

0

கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம்(17.06.2024) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் அறிவித்துள்ளது.

நல்லிணக்கமும் மகிழ்ச்சியும்

இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ஈத்-அல் அதா ஹஜ் பெருநாளை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .    

NO COMMENTS

Exit mobile version